வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 12 நவம்பர் 2016 (15:48 IST)

காளை விந்து மூலம் மாதம் ரூ.80 லட்சம் வருமானம்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள யுவராஜ் என்ற காளை மாடு அதன் விந்து மூலம் உரிமையாளருக்கு மாதம் ரூ.80 லட்சம் வருமான பெற்று தருகிறது.


 

 
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆண்டுதோறும் உழவர் சந்தையில் நடைப்பெறும். இந்த வருடம் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அனைவரது கவனத்தையும் ஒரு காளை மாடு ஈர்த்தது.
 
யுவராஜ் என்று அழைக்கப்படும் அந்த காளை மாட்டுக்கு 8 வயது. 1.5 எடைக்கொண்ட காளை மாடு 5.9 அங்குலம் உயரம் உடையது. யுவராஜ் மாட்டின் உரிமையாளர் இதை பராமரிப்பது சுலபமில்லை என்று கூறியுள்ளார்.
 
யுவராஜ் காளை மாடு தினமும் 20 லிட்டர் பால் மற்றும் 15 கிலோ பழங்களும் சாப்பிடும். யுவராஜ் காளையின் விந்துக்களை விற்பனை செய்வதன் மூலம் மாதம் ரூ.80 லட்சம் வருமானம் பெற்று வருகிறார் அதன் உரிமையாளர். 
 
இந்த காளை மாட்டை ஒரு பணக்காரர் ரூ.9.25 கோடி விலைக்கு கேட்டுள்ளார். ஆனால் யுவராஜ் காளை மாட்டின் விற்பனையாளர் அதை விற்க மறுத்துவிட்டார்.