1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By bala
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (11:46 IST)

நடைமேடையிலிருந்து ரயில் மீது குதித்த வாலிபர் உடல் கருகி பலி

மும்பை ஜி.டி.பி. ரயில் நிலையத்தின் அருகிலுள்ள உள்ள நடைமேம்பாலத்திலிருந்து ரெயில் மேல் குதித்த வாலிபர் மின்சாரம் தாக்கி உடல் கருகி உயிரிழந்தார்.


 

நேற்று மாலை மும்பை பன்வெல் நோக்கி  சென்ற மின்சார ரெயில் மாலை 6 மணியளவில் ஜி.டி.பி. ரெயில் நிலையம், சுன்னாப்பட்டி ரெயில்நிலையம் இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள நடைமேம்பாலத்தில் நின்று கொண்டு இருந்த வாலிபர் ஒருவர் திடீரென ரெயில் மீது குதித்தார். இதில் மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியானார்.

பலியான வாலிபர் மின்சார ரெயில் பேண்டோகிராப் மேல் விழுந்ததால் அவரது உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. எனவே அந்த வழித்தடத்தில் வரும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. பின்னர் 30 நிமிட போராட்டத்திற்கு பிறகே வாலிபரின் உடல் மீட்கப்பட்டது.

இது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர்.