1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 31 மே 2023 (07:18 IST)

கங்கையில் பதக்கங்களை வீசும் முடிவில் திடீர் மாற்றம்.. மல்யுத்த வீராங்கனைகள் நாடகமா?

பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீசப் போவதாக நேற்று மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்தனர். வீட்டில் இருந்த பதக்கங்களை எடுத்து வைக்கும் வீடியோவையும் வீராங்கனைகள் வெளியிட்டனர். 
 
இந்த வீடியோவுக்கு உருக்கமான பல கருத்துக்கள் கூறப்பட்ட நிலையில் திடீரென வீராங்கனைகள் தாங்கள் கங்கையில் பதக்கங்களை தூக்கி எறியும் முடிவை கைவிடுவதாகவும் பாலியல் குற்றவாளி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐந்து நாட்கள் கெடு இருப்பதாகவும் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 பாலியல் குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கங்கையில் பதக்கங்களை வீசப் போவதாக அறிவித்த வீராங்கனைகள் திடீரென அந்த முடிவை மாற்றிக் கொண்டது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பு வருகின்றனர்.
 
வீராங்கனைகளின் நாடகமா அல்லது மத்திய அரசுக்கு கொடுக்கும் எச்சரிக்கையா என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். மொத்தத்தில் இந்த போராட்டத்திற்கு பின்னர் அரசியல் கட்சிகள் இருப்பதாக கூறப்படுவது ஒருவேளை உண்மை தானோ என்ற எண்ணத்தை பொதுமக்களுக்கு தற்போது ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Siva