வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 19 ஏப்ரல் 2021 (13:02 IST)

படுக்கை இல்லை ஆட்டோவில் சிகிச்சை - கர்நாடகாவில் கொடூரம்!

கர்நாடகாவில் அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் கிடைக்காமல் பெண் ஒருவருக்கு ஆட்டோவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 
கொரோனா 2 வது அலை உருவாகி நாடு முழுவதும் அதீத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால், அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள். 
 
இதனிடையே கர்நாடகாவில் பெண்ணுக்கு ஆட்டோவில் வைத்து ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் செயற்கை சுவாச கருவி பொருத்தி குடும்பத்தினர் சிகிச்சை அளித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.