செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 26 மார்ச் 2020 (10:38 IST)

EMI கட்ட கூடுதல் கால அவகாசம் கிடைக்குமா?

EMI கட்ட கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
 
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மத்திய அரசு சில சலுகைகளை வழங்கியுள்ளது. அவை பின்வருமாறு... 
 
1. வருமான வரி ரிட்டன்ஸ் தாக்கல் செய்ய ஜுன் மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு. 
2. ஆதார் - பான் அட்டை இணைப்பதற்கான கால அவகாசமும் ஜுன் 30 வரை நீட்டிப்பு.
3. மார்ச், ஏப்ரம் மே மாதத்திற்கான ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும் ஜூன் 30 வரை நீட்டிப்பு.
4. பொருளாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட மாட்டாது.
5. விவாத் சே விஸ்வாஸ் திட்டமும் ஜூன் 30, 2020 வரை நீட்டிப்பு.
6. TDS தாமதமாக வைப்பு வைக்கப்பட்டால் 9% வட்டி மட்டும் வசூலிக்கப்படும். 
7. டெபிட் கார்ட் மூலம் எந்த வங்கியின் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்தாலும் 3 மாதங்களுக்கு கட்டணம் எதுவும் விதிக்கப்படாது.
8. வங்கி சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டும் என்பதில் விலக்கு. 
 
இந்த சலுகைகளுக்கு மத்தியில் மாதந்திர தவணைகளை கட்டுவது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. பணத்தை கட்டாமல் இருந்தால் கட்டத்தவறியவர்களின் பெயர் சிபில் அறிக்கையில் வெளியாகும் என தெரிகிறது. 
 
எனவே, மாதந்திர தவணைகளை கட்டும் தேதியை கூடுதல் வட்டி இல்லாமல் ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது 3 மாதங்களுக்கு இதனை தள்ளி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு இதனை பரிசீலிக்குமா என்பது சந்தேகமே.