வாரத்திற்கு 2 நாட்கள் முழு பொதுமுடக்கம்: எந்த மாநிலத்தில் தெரியுமா?

திங்கள், 20 ஜூலை 2020 (19:58 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த மார்ச் மாதத்திலிருந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை விட அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் தமிழகத்திலும், டெல்லி மகாராஷ்டிரா மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அமலில் உள்ள ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைவதால் அதன் பின்னரும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? குறித்த அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது
 
ஏற்கனவே ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் வருமானம் இன்றி இருக்கும் பொது மக்கள் மீண்டும் முழு பொதுமுடக்கம் என்ற முடிவு எடுக்கப்பட்டால் பெரும் சிக்கலுக்கு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனை அடுத்து அம்மாநிலத்தில் வாரம் இரண்டு நாட்கள் முழு பொது முடக்கத்தை அமல்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுவதால் அம்மாநில மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

எல்லாம் காட்டு

இன்று இரவு வானில் ஒரு அரிய காட்சி.. புளூ மூனை காணத்தவறாதீர்கள்...

5 வருடங்களாக துரைமுருகன் பூட்டி வைத்திருந்த எம்.எல்.ஏ அலுவலம்.. இன்று சுறுசுறுப்பாக புத்தம் புது பொலிவுடன்.. இதுதாண்டா மாற்றம்..

8 பேரை சரமாரியாக வெட்டிய 6 பேர் கும்பல்.. 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் அரெஸ்ட்.. ட்ரோன் தொழில்நுட்பம்.. துப்பாக்கி சூடு.. போலீஸ் அதிரடி...

அடிக்கடி வந்து சோதனை செய்வேன்: அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

திருவள்ளுவரின் காவி உடை.. நடிகை கஸ்தூரியின் சாட்டையடி பதிவு:

அடுத்த கட்டுரையில்
Show comments