1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 16 ஜூன் 2020 (20:06 IST)

தமிழகத்தில் இருந்து வருவோருக்கு அனுமதியில்லை – புதுவை முதல்வர் அதிரடி

புதுவை மாநிலத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனா பாதிப்பை குறைக்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு, கல்லூரிகளில் இறுதி ஆண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என இன்று அறிவித்துள்ளது.

இந்நிலையில்,  இ - பாஸ் வைத்திருந்தாலும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வர அனுமதியில்லை; புதுச்சேரியின் எல்லைகளை மூடினால்தான் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

மேலும்,  தமிகத்தில் இருந்து வருவோர் இ- பாஸ் வைத்திருந்தாலும்  புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், கடலூர் , விழுப்புரத்தில் இருந்து மருத்துவ உதவிக்காக வருவோர் தவிர பிறருக்கு புதுச்சேரிக்குள் அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார்.