தொடர்புடைய செய்திகள்
- யுக்ரேன் போர்: ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல் - 22 பேர் பலி
- உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில்: ஜெர்மனி அரசு சாதனை
- பெண் காலவருக்கு கத்திக்குத்து: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
- மனைவியை ரயில் முன் தள்ளி கொன்ற கணவன்! – அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி வீடியோ!
- ஸ்லீப்பர் பெட்டிகள் Unreserved பெட்டிகளாக மாற்றம்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
மணிக்கு 180 கிமீ வேகத்தில் வந்தே பாரத் ரயில்: வெற்றிகரமான சோதனை ஓட்டம்!
மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கி சோதனை செய்யப்பட்டதில் வெற்றிகரமாக சோதனை முடிந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நவீன அம்சங்களுடன் தயாராகி வரும் நிலையில் இந்த ரயிலின் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடந்தது.
இந்த நிலையில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தே பாரத் சோதனை செய்யப்பட்டு வெற்றிகரமாக முடிந்ததாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்
முதலில் 120 கிமீ வேகத்தில் தொடங்கி பின்னர் படிப்படியாக 180 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தே பாரத் இயங்கியது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த ரயில் சென்னை - மதுரை இடையே இயக்கப்பட்டால் 3 மணி நேரத்தில் பயணம் முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
