1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஜூலை 2023 (10:32 IST)

ஒரே நாடு ஒரே கட்சி என்ற நிலையில் இந்தியா.. பாஜக மீது உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு..!

ஒரே நாடு ஒரே கட்சி என்ற நிலையில் இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்றும் அதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம் என்றும் மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார் 
 
மகாராஷ்டிராவில் பெரும்பான்மை இருந்தும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை ஏன் திருடினீர்கள் என்று கேள்வி எழுப்பிய உத்தவ் தாக்கரே, தரம் தாழ்ந்தவர்களை கொண்ட கட்சியாக பாஜக தற்போது மாறியுள்ளது என்று குற்றம் சாட்டினார். 
 
ஒரே நாடு ஒரே கட்சி என்ற நிலையில் இந்தியாவில் உருவாக்க பாஜக முயற்சி வெற்றி வருகிறது என்றும் அதை நாங்கள் எந்த காலத்திலும் அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார். 
 
ஏற்கனவே உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியை இரண்டாக உடைந்து ஷிண்டே தற்போது அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran