1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2019 (12:01 IST)

பர்சை பதம் பார்த்த புல்லட்: ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய காவலர்!

உத்திரபிரதேசத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் காவலர் ஒருவர். 

 
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டங்கள் நாடெங்கும் நடந்து வருகிறது. அந்த வகையில் உத்திரபிரதேசத்தில் நடந்த போராட்டத்தின் போது போராட்டகாரர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் எதிர்பாராத் வேளையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. 
 
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர் ஒருவர் மீது குண்டு பாய்ந்துள்ளது. ஆனால் அந்த காவலர் குண்டு துளைக்காத உடுப்பு அணிந்திருந்ததால் தப்பித்துள்ளார். பின்னர் சட்டைபாக்கெட்டில் வைத்திருந்த பர்சை எடுத்து பார்த்த போது அதில் ஒரு குண்டு இருந்துள்ளது. 
 
ஆம், குண்டு துளைக்காத உடுப்பை மீறி அந்த குண்டு பாய்ந்து தனது பர்சில் இருந்து ஏடிஎம் கார்ட், சாமி போட்டோக்களை துளைத்து உடலில் படாமல் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.