1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 9 பிப்ரவரி 2022 (19:54 IST)

இனிமேல் டூவீலரில் டிரிப்பிள்ஸ் போகலாம்: உபி எம்.எல்.ஏ அறிவிப்பு!

இனிமேல் டூவீலரில் டிரிப்பிள்ஸ் போகலாம்: உபி எம்.எல்.ஏ அறிவிப்பு!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் டூவீலரில் டிரிப்பிள்ஸ்  அனுமதி உண்டு என அம்மாநில எம்எல்ஏ ஒருவர் வாக்குறுதி அளித்துள்ளார். 
 
உத்தரபிரதேச மாநிலத்தில் நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக எம் எல் ஏ ராஜ்பார்பர் என்பவர் எங்கள் அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பைக்கில் 3 பேர் செல்லலாம் என்றும் டிரிப்பிள்ஸ் அனுமதிக்கப்படும் என்றும் டிரிப்பிள்ஸ் சென்றால் அபராதம் விதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது