நாடாளுமன்ற வளாகம் அருகே குட்டி விமானம் பறந்ததால் பரபரப்பு
நாடாளுமன்ற வளாகம் அருகே ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் நாடாளுமன்றத்தின் 4வது புவுன்டெய்ன் அமைந்துள்ள இடத்தில் நேற்று ஆளில்லா விமானம் ஒன்று தாழ்வாக பறந்து கொண்டிருந்தது.
குழந்தையுடன் இருந்த வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் அந்த விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில், அவர் அங்கிருந்து சென்று விட்டார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆளில்லா விமானத்தை இயக்கிய அந்த வெளிநாட்டினர் தூதரகம் ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்து வருவதாக தெரியவந்ததுள்ளது.