1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 13 டிசம்பர் 2023 (13:31 IST)

நெட் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மறு வாய்ப்பு.. யுஜிசி அறிவிப்பு

நெட் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படுவதாக யுஜிசி அறிவித்துள்ளது. 
 
சமீபத்தில் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் காரணமாக அந்த நேரத்தில் நடந்த நெட் தேர்வை சில மாணவர்கள் எழுத முடியவில்லை. இந்த தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று கூட சிலர் கூறப்பட்ட நிலையில்  திட்டமிட்டபடி தேர்வுகள் நடந்தது. 
 
இந்த நிலையில் புயலால் சென்னை நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நெட் தேர்வு எழுத முடியாத நிலையில் நாளை மீண்டும் அவர்களுக்கு தேர்வு நடத்தப்படுவதாக பல்கலைக்கழகம் மானிய குழு அறிவித்துள்ளது. 
 
கடந்த ஆறாம் தேதி எழுத முடியாத மாணவர்களுக்காக மீண்டும் தேர்வு நடத்தப்படுவதாகவும் ஏற்கனவே இருக்கும் தேர்வு மையங்களில் நாளை தேர்வு நடைபெறும் என்றும் ஆறாம் தேதி தேர்வு எழுதாதவர்கள் நாளை தேர்வில் பங்கேற்கலாம் என்றும் பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது
 
 
Edited by Siva