1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (18:24 IST)

ரணகளத்திலும் கிளுகிளுப்பு: கலவரத்தில் செல்ஃபி எடுத்த இளைஞர்கள்

கர்நாடகா மாநிலத்தில் நடைப்பெற்ற கலவரத்தில் ஏராளமான வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டது. அதில் இரண்டு கன்னட இளைஞர்கள் செல்ஃபி எடுத்துள்ளனர்.


 

 
இந்த செல்ஃபி ஏதோ ஒரு வகையில் அனைவரையும் ஈர்த்துவிட்டது. இதனால் நேரம், காலம் கூட அறியாமல் செல்ஃபி எடுத்து வருகின்றனர். அதுவும் இளைஞர்கள் சாதரணமாகவே புதியதுக்கு வரவேற்பு கொடுத்து அடிமையாவது வழக்கம். 
 
அதுபோல் இளைஞர்களிடம் இந்த செல்ஃபி மோகம் தலைவிரித்து ஆடுகிறது. காவிரி பிரச்சனையில் பெங்களூரில் நடந்த வன்முறை பெரிய அளவில் பாதிப்பையும் இனவெறியையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் கலவரத்தின் போது இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அமர்ந்தப்படி செல்ஃபி எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.