1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (19:47 IST)

கேரளாவில் இன்று ஒரே நாளில் 42 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு!

கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிப்படைந்துள்ளனர் என அம்மாநில அரசு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,677  என்றும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 36  என்றும் கேரள  மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
மேலும் கேரள மாநிலத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வரை எண்ணிக்கை 3,69,073. என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 1,144 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.