1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Tirinamul Congress MPs suspended

மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸின் 6 உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

மாநிலங்களவை
நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 
பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இன்று நாடாளுமன்றம் 12வது நாளாக தொடங்கிய நிலையில் அமளியில் ஈடுபட்ட திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 
டோலா சென், நடிமுல் ஹக், அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ், ஷாந்தா சேத்ரி, அர்பிதா கோஷ், மெளசம் நூர் ஆகிய இந்த ஆறு உறுப்பினர்களும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
அதிமுக செய்த செலவு, வைத்த கடன், கஜானா நிலை என்ன? – வெளியாகிறது வெள்ளையறிக்கை!