வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 22 ஆகஸ்ட் 2020 (17:04 IST)

குழந்தையின் உடலை கண்டுபிடித்த நாயை தத்தெடுத்த காவலர்

கேரள மாநிலத்தில் உள்ள பெட்டிமுடியில் சமீபத்தில் நிலச்சரிவு நிகழ்ந்தது. இதில் காணாமல் போன குழந்தையைக் கணுடுபிடிக்க ஒரு நாய் உதவியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கேரளாவில் பெட்டிமுடியில் உள்ள ராஜா மாலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

சிலரைக் கண்டுபிடுத்தனர். காணாமல் போனோரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நிலச்சரியில் சிக்கிக் காணாமல் போன தனது முதலாளியின்  குழந்தையை மீட்க நாய் உதவியது. இதற்காகப் பலரும் அந்த நாயைப் பாராட்டினர்.

அந்த நாயின் பெயர் கூவி. தற்போது அரசு அனுமதியுடன்  அந்த நாயை காவலர் ஒருவர் தத்தெடுத்துள்ளார்.