1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (17:48 IST)

தப்பி செல்ல முயன்ற தீவிரவாதி மும்பை விமான நிலையத்தில் கைது

தப்பி செல்ல முயன்ற தீவிரவாதி மும்பை விமான நிலையத்தில் கைது

தப்பி செல்ல முயன்ற தீவிரவாதி மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
மும்பை விமான நிலையத்திலிருந்து தீவிரவாதி ஒருவர் தப்பி செல்லவுள்ளதாக, தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
இதைத் தொடர்ந்து, மும்பை விமான நிலையத்தில் தப்பி செல்ல முயன்ற  ஜைனூல் ஆபுதீன் என்ற தீவிரவாதியை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
 
கைது செய்யப்பட்ட   ஜைனூல் ஆபுதீன், இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
 
இவர் பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தீவிரவாதியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.