வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (16:19 IST)

சிறுவனுடன் உல்லாசம்: வீடு புகுந்து ஆசையை தீர்த்த இளம்பெண் கைது!

சிறுவனுடன் உல்லாசம்: வீடு புகுந்து ஆசையை தீர்த்த இளம்பெண் கைது!

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே கண்ணங்கட்டு பகுதியை சேர்ந்த மெடில்டா என்ற 21 வயது இளம்பெண் அழகுக்கலை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளி மாணவன் ஒருவரை பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


 
 
21 வயதான மெடில்டாவுக்கும் ராமாபுரம் பகுதியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் ஒருவனுக்கும் ஃபேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது காதலாக மாறி இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
 
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்த மாணவனின் வீட்டிற்கு சென்ற மெடில்டா, மாணவன் இருந்த அறைக்கு சென்று கதவை அடைத்துள்ளார். பெற்றோர்கள் சத்தமிட்டும் இருவரும் கதவை திறக்கவில்லை. பின்னர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
 
காவலர்கள் வந்து கதவை தட்டினர். ஆனால் கதவை திறந்தால் தற்கொலை செய்துவிடுவோம் என இருவரும் மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து போலிசார் சென்றுவிட்டனர். இருவரும் இரண்டு நாட்களாக அறையை விட்டு வெளியே வராமல் உள்ளேயே இருந்தனர்.
 
இதனையடுத்து மீண்டும் போலீசார் வரவழைக்கப்பட்டு கதவு உடைக்கப்பட்டு உடனடியாக இருவரையும் வெளியே கொண்டு வந்தனர். பின்னர் சிறுவனை பலாத்காரம் செய்ததாக அந்த பெண் மீது சிறுவனின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து இளம்பெண் மெடில்டாவை போலீசார் கைது செய்தனர்.
 
ஆனாலும் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த மாணவன் தனக்கு பெற்றோர் உடன் செல்ல விருப்பம் இல்லை எனக்கூறியதால் அந்த மாணவன் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.