1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 23 மார்ச் 2020 (10:52 IST)

ஊரடங்கை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்ட டாஸ்மாக் – அதற்கு முந்தைய நாள் விற்பனை இவ்வளவா ?

சனிக்கிழமை ஒருநாளில் மட்டும் 220 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று பிரதமரின் வேண்டுகோளை ஏற்று ஊரடங்கை மக்கள் செயல்படுத்தினர். அதை தொடர்ந்து தமிழகத்தில் பேருந்து, ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.. வணிகர் சங்கமும் கடைகளை மூடுவதாக அறிவித்தன. ஏற்கனவே டாஸ்மாக் அருகே செயல்படும் பார்கள் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக மூடப்பட்ட நிலையில் நேற்று மட்டும். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

டாஸ்மாக்கை மூடுவதாக அறிவித்ததை அடுத்து ’குடி’மகன்கள் முதள் நாளே கடைக்கு படையெடுக்க ஆரம்பித்தனர். இதனால் நேற்று முன் தினம் மட்டும் தமிழகத்தில் 220 கோடி ரூபாய்க்கு மது விற்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.சாதாரண நாட்களில் ₹70 முதல் ₹100 கோடி வரையிலும், சனி, ஞாயிறு போன்ற வாரவிடுமுறை நாட்களில் ₹120 முதல் ₹135 கோடி வரையிலும் மதுவிற்பனை நடைபெறும். ஆனால் நேற்று முன் தினம் ஒரே நாளில் 3 மடங்கு மது விற்பனை ஆகியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.