1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 29 மார்ச் 2024 (13:20 IST)

தி.மு.க.வின் தவறான ஆட்சியால் தமிழகம் சோர்வு..! பிரதமர் மோடி..!

Modi
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் இன்று மாலை 5 மணிக்கு காணொளி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். 
 
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி மூலம் எனது பூத் வலிமையான பூத் என்ற தலைப்பில் தமிழக பாஜகவின் கடின உழைப்பாளிகளுடன் உரையாடல் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாட்டில் உள்ள நமது நிர்வாகிகள் எப்படி மக்கள் மத்தியில் பணியாற்றுவதும், நமது கட்சியின் நல்லாட்சி நிகழ்ச்சி நிரல் மாநிலம் முழுவதும் திறம்பட தெரிவிக்கப்படுவதை உறுதி செய்வதும் பாராட்டுக்குரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
தி.மு.க.வின் தவறான ஆட்சியால் தமிழகம் சோர்ந்து போய், எங்கள் கட்சியை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறது என்பதும் அதே உண்மைதான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.