1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2015 (04:47 IST)

ஆன்மீக குரு தயானந்த சரஸ்வதி சுவாமி உடல் நாளை அடக்கம்

ஆன்மீக குரு தயானந்த சரஸ்வதி சுவாமி உடல் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்படுகிறது.
 
1930ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ஆந் தேதி திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில் பிறந்தவர்  சுவாமி தயானந்த சரஸ்வதி அவருக்கு வயது (87) ரிஷிகேஷில், ஷீஷம்ஜாடியில் உள்ள ஆசிரமத்தில் உள்ளார் சுவாமி தயானந்த கிரி(87). கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக இவர் சிரமப்பட்டு வந்தார்.
 

 
இதன் காரணமாக, ஜாலிகிராண்ட் ஹிமாலயன் மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை முடித்துக் கொண்டு, மீண்டும் தனது ஆசிரமம்  திரும்பினார்.
 
இந்த நிலையில் நேற்று, நள்ளிரவு சுமார் 12.20 மணிக்கு சுவாமி தயானந்த கிரி இறைவனடி சேர்ந்தார். ஆசிரம நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
 
சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமியின் உடல் அடக்கம் வெள்ளிக்கிழமை ரிஷிகேஷில் உள்ள ஆசிரமத்தில் நடைபெறுகிறது.
 
தனக்கான சமாதி அமைக்கும் இடத்தை தயானந்த சரஸ்வதி சுவாமிகள் கடந்த 2 மாதம் முன்பே தேர்வு செய்து கொடுத்துள்ளார். அந்த இடத்திலேயே உடல் அடக்கம் செய்யப்படுகிறது.