1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 7 மார்ச் 2022 (14:14 IST)

ஒரே செயலியில் எல்லாமே கிடைக்கும்: இந்தியாவில் விரைவில் சூப்பர் செயலி!

ஒரே செயலியில் எல்லாமே கிடைக்கும்: இந்தியாவில் விரைவில் சூப்பர் செயலி!
ஒரே செயலியில் அனைத்தும் கிடைக்கும் வகையில் சூப்பர் செயலிகளை உருவாக்கும் முயற்சியில் முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன
 
ரிலையன்ஸ், டாடா, எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரே செயலியில் பொதுமக்கள் அனைத்தையும் வாங்கிக் கொள்ளும் வகையில் சூப்பர் செயலிகளை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன
 
தற்போது இந்தியாவில் உள்ள பொதுமக்கள் கால்டாக்சி அழைக்க, மளிகை பொருட்கள் வாங்க, மருந்து பொருட்களை வாங்க, எலக்ட்ரானிக் பொருட்களை வாங்க என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர் 
ஆனால் இந்த சூப்பர் செயலை அமலுக்கு வந்துவிட்டால் ஒரே செயலியில் அனைத்தையும் வாங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலிகள் இந்தியாவில் எந்த அளவுக்கு வெற்றிகரமாக பொதுமக்களால் வரவேற்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்