தொடர்புடைய செய்திகள்
- தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்: சுனில் அரோரா
- சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியை தேர்வு செய்தது ஏன்? உதயநிதி பதில்!
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள்: ஆளும் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்ன?
- தேர்தல் தேதி அறிவிப்பு; இன்றே முடிகிறதா சட்டப்பேரவை கூட்டம்?
- மதியம் முதல்வர் செய்தியாளர்கள் சந்திப்பு! – வன்னியர்கள் இட ஒதுக்கீடு அறிவிப்பா?
5 மாநிலங்கள், 824 தொகுதிகள்; 2.7 லட்சம் வாக்குச்சாவடிகள்! – பரபரக்கும் மாநில தேர்தல்!
தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆட்சி காலம் முடியும் நிலையில் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில மற்றும் தேசிய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
இந்நிலையில் 5 மாநிலங்களிலும் தமிழகத்தில் 234, புதுச்சேரியில் 30, கேரளாவில் 140, மேற்கு வங்கத்தில் 294 மற்றும் அசாமில் 126 தொகுதிகள் என மொத்தம் 824 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 5 மாநிலங்களில் 2.7 லட்சம் வாக்குச்சாவடிகள் மூலமாக 18.68 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர் என சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா காலம் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும், பாதுகாப்பான முறையில் தேர்தலை நடத்த உள்ளதாகவும், தற்போது தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
