1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (19:13 IST)

இன்னும் சில நாட்களுக்கு மூடுபனி நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

Delhi snow
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மூடுபனி அதிகமாக இருக்கும் நிலையில் இன்னும் சில நாட்களுக்கு மூடுபனி இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்திய வானிலை ஆய்வு மையம் சற்று முன் வெளியிட்ட அறிவிப்பில் வானிலை மாற்றம் காரணமாக பஞ்சாப் ஹரியானா ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்கள் கடுமையான மூடுபனி நீடிக்கும் என தெரிவித்துள்ளது
 
மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு டெல்லி இமாச்சலப் பிரதேசம் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கடும் குளிர் நீடிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன 
 
ஏற்கனவே கடுமையான குளிர் மற்றும் மூடுபனியால் வடமாநில மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிப்பு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva