1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 அக்டோபர் 2018 (15:03 IST)

ரூ.2 கோடிக்கு பாம்பு விஷத்தை விற்க முயன்ற நபர்கள் கைது

மகாராஷ்டிராவில் பாம்பு விஷத்தை விற்க முயன்ற 2 நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வாபி நகரில் இருவர் பாம்பு விஷத்தை கடத்துவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் பாம்பின் விஷத்தை கடத்தி விற்க முயன்ற இருவரை அதிரடியாக கைது செய்தனர்.
 
அவர்களிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியது. பாம்பின் விஷத்தை வைத்து பல மருந்துகள் தயாரிக்கலாம் என்பதால், மருந்து நிறுவனங்கள் இதற்கு நல்ல விலை கொடுக்கின்றன. ஆகவே பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த கடத்தலில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 850 மில்லி பாம்பு விஷம் சர்வதேச மதிப்பு ரூ.1.70 கோடியாகும்.
 
இதனைத்தொடர்ந்து இதில் வேறு யாருக்கும் தொடர்பிருக்கிறதா என போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.