1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (23:59 IST)

பிரமர் மோடிக்கு எதிராக அவதூறு: சுந்தர் பிச்சை மீது வழக்குப் பதிவு செய்து நீக்கம்

கூகுள் நிறுவனத்தில் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை மீது அவதூறி வழக்குப் பதிவுசெய்யப்பட்டு பின் நீக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகக் கருத்துக் கூறி வீடியோ வெளியிட்டது தொடர்பாக கூகுள் நிறுவனத்தில் சி.இ.ஒ சுந்தர் பிச்சை மீது உத்தரபிரதேசப் போலீஸார் அவசரத்தில் ஒரு வழக்குப் பதிவு செய்தனர்.

இதன்பின்னர், இந்த வழக்கிற்கும் சுந்தர் பிச்சை உள்ளிட்ட 4 கூகுள் நிறுவன அதிகாரிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முடிவு செய்யப்பட்டு அவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.