1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 5 நவம்பர் 2021 (16:48 IST)

ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றார் சித்து!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நவ்ஜோத் சிங் சித்து அவர்கள் திடீரென தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில மாதங்களாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்ப நிலை நிலவி வருகிறது என்பதும் அம்மாநில முதல்வராக இருந்த அம்ரிந்தர் சிங் திடீரென மாற்றப் பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நவ்ஜோத் சிங் சித்து அவர்கள் தனது ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்
 
இதனையடுத்து பஞ்சாப் மாநில காங்கிரசில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது