1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2023 (11:37 IST)

ஒரே இரவில் கோடீஸ்வரர்கள் ஆன 11 தூய்மைப்பணியாளர்கள்.. அதிசயம் நடந்தது எப்படி?

கேரளாவை சேர்ந்த 11 தூய்மை பணியாளர்கள் ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.  
 
 கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம் பரப்பனங்காடு என்ற பகுதியில் உள்ள 11 தூய்மை பணியாளர்கள் சேர்ந்து 250 ரூபாய்க்கு ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினர். 
இந்த லாட்டரி டிக்கெட்டுக்கு 10 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த பணத்தை 11 பேர் பேர் சமமாக பிரித்துக் கொண்டனர். 
 
இதனை அடுத்து  நேற்று வரை ஏழ்மை நிலையிலிருந்த தூய்மை பணியாளர்கள் இன்று கிட்டத்தட்ட கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran