வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 29 பிப்ரவரி 2016 (08:38 IST)

சமாஜ்வாடி கட்சி பிரமுகரை சுட்டுக் கொலை செய்த மர்ம கும்பல்

சமாஜ்வாடி கட்சி பிரமுகர் சுட்டுக் கொலை

சமாஜ்வாடி கட்சிப் பிரமுகர் உத்தரப் பிரதேச மாநிலம் மௌ நகரில் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.


 

 
உத்தரப் பிரதேச மாநிலம் மௌ நகரின் ராம் குன்வார் யாதவ் என்ற சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த பிரமுகர், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
 
அப்போது, அவரை வழிமறித்த ஒரு மர்ம கும்பல், துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
 
இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.