வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : வெள்ளி, 23 அக்டோபர் 2015 (18:22 IST)

விருதினை திரும்பப்பெற வேண்டும் - எழுத்தாளர்களக்கு சாகித்ய அகாடமி வேண்டுகோள்

சாகித்ய அகாடமியின் செயற்குழு கூட்டம் சாகித்ய அகாடமி தலைவர் விஷ்வநாத் பிரசாத் திவாரி தலைமையில் நடைபெற்றது.அந்த கூட்டத்தில், இந்தியாவில் நடந்த எழுத்தாளர்கள் கொலைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
           

 





















இதணை தொடர்ந்து, எழுத்தாளர்கள் கொலை மற்றும் பல்வேறு சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து சாகித்ய அகாடமி விருதைத் திருப்பிக் கொடுத்தவர்கள் மீண்டும் விருதினை திரும்பப்பெற வேண்டும் என்று சாகித்ய அகாடமி  வேண்டுகோள் விடுத்துள்ளது.

கன்னட எழுத்தாளர் கல்புர்கி கொலை சம்பவங்கள் போன்று இனிமேல் நிகழாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாகித்ய அகாடமி வலியுறுத்தியுள்ளது.

இதற்கு முன்பாக, சாகித்ய அகாடமி அலுவலகம் அருகே எழுத்தாளர்கள் அமைதி பேரணியில் ஈடுபட்டனர் அப்போது எழுத்தாளர் கல்பர்கி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.