1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: புதன், 28 மே 2014 (13:42 IST)

காஷ்மீர் என்னுடைய சொத்து என்று நான் கூறவேயில்லை - உமர் அப்துல்லா

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து இல்லையேல், அது இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்காது என்று தான் நான் கூறினேனே தவிர, அப்பகுதி என்னுடைய சொத்து என்று நான் கூறவேயில்லை என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.
 
மேலும், எனது இந்த கருத்துக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்திருப்பது கண்டனத்துக்கு உரியது. காஷ்மீர் மாநிலத்துக்கு 370வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து குறித்த விவாதத்துக்கு நாங்களும் தயாராகவே உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.