வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 7 டிசம்பர் 2015 (14:01 IST)

தமிழக வெள்ள பாதிப்பை பார்வையிட ராகுல் காந்தி நாளை சென்னை வருகை

வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாளை சென்னை வருகிறார்.
 
தமிழகத்தை புரட்டி போட்ட கனமழை தலைநகரை தடம் இல்லா நகராக மாற்றிவிட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு அவதியுறுகின்றனர். பல தலைவர்கள், பிரபலங்கள் தங்கள் ஆறுதலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
 
சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி சென்னை வந்து ஹெலிகாப்டர் மூலமாக வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண நிதியும் அறிவித்து சென்றார். பல மாநிலங்களும் நிவாரண நிதிகள் வழங்கி வருகின்றன.
 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாளை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் சொல்ல சென்னை வருகிறார். சென்னை வரும் ராகுல் காந்தி சாலை மூலமாக சென்னை உட்பட பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்.
 
ராகுலின் வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று வெள்ளம் பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர்.