பெண் சாமியார் குட்டைப் பாவாடை அணியக் கூடாதா? பெண் சாமியார் ராதே மா கேள்வி
மும்பையைச் சேர்ந்த பெண் சாமியார் ராதே மா மினி ஸ்கர்ட் அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையல், பெண் சாமியார் குட்டைப் பாவாடை அணியக் கூடாதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பையில் வரதட்சிணைப் புகாரில் சிக்கிய பெண் சாமியார் ராதே மா, குட்டைப் பாவாடை அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து பதில் அளித்த ராதே மா, எனது பக்தர்களுடன் சுற்றுலா சென்றிருந்த போது அவர்கள் ஆசையோடு அளித்த ஆடையை அணிந்திருந்தேன். துறவிகளும், சாமியார்களும் இப்படித்தான் ஆடை அணிய வேண்டும் என்று யார் சொன்னது என்று கேட்டுள்ளார்.