1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 ஜூலை 2022 (12:58 IST)

பஞ்சாப் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு?

Punjab
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற பகவான் சிங் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பஞ்சாப் முதலமைச்சர் கடும் வயிற்று வலியால் அவதிப்படுவதாகவும், இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
அவருக்கு மருத்துவர்கள் தீவிர பரிசோதனை செய்த பின்னர் சிகிச்சை அளித்து வருவதாகவும் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து சோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங்அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவரை முழுமையாக உரையாடுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன