இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்: கவுண்ட்டவுன் தொடக்கம்

வியாழன், 17 டிசம்பர் 2020 (07:05 IST)
இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்
பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறதை அடுத்து 25 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் இன்று ஏவப்படுகிறது. சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிற்பகல் 3.41 மணிக்கு ராக்கெட் ஏவப்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று 2.41 மணிக்கு தொடங்கியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று செலுத்தப்படும் இந்த பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது என்றும், இந்த ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இந்த ராக்கெட்டில் உள்ள செயற்கைக்கோள் கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மைகளுக்கு தரவுகளை பெற உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இன்று ராக்கெட் செலுத்தப்படவுள்ள நிலையில் நேற்றே இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

எல்லாம் காட்டு

5 தொகுதி இடைத்தேர்தல்!.. குழப்பத்தில் அதிமுக!. ஸ்கெட்ச் போடும் திமுக!....

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

அடுத்த கட்டுரையில்
Show comments