1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 21 பிப்ரவரி 2018 (17:48 IST)

பிரியங்க சோப்ராவை நீக்குங்கள்: காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அசாம் மாநிலத்தின் சுற்றுலாத்துறையின் தூதராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று நடைபெற்ற அசாம் சட்டமன்ற கூட்டத்தொடரில் அசாம் மாநிலத்தின் சுற்றுலாத்துறை தூதர் பதவியில் இருந்து பிரியங்காவை நீக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சமீபத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் வெளியான 2018ஆம் வருட காலண்டரில் பிரியங்கா சோப்ராவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது ஆனால் அந்த காலண்டரில் உள்ள புகைப்படங்கள் அளவுக்கு மீறி கவர்ச்சியாக இருந்ததாகவும், இது அசாம் கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூறி வருகின்றனர்.
 
மேலும் பிரியங்கா சோப்ரா சுற்றுலாத்துறையின் தூதராக பதவியேற்றதில் இருந்து அந்த துறையில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் நிகழவில்லை என்றும் எனவே அவரை நீக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை அசாம் அரசு ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.