1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 15 ஜூன் 2016 (23:31 IST)

இந்தியாவில் மீண்டும் போலியோ வைரஸ் விஸ்வரூபம்

5 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவில் ஒழிக்கப்பட்ட போலியோ வைரஸ் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.


 

 
இந்தியாவை போலியோ இல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், 5 ஆண்டுகளுக்குப்பின், தெலுங்கானாவில் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டிருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே அம்பர் பேட்டை பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவு நீரானது ஆய்வகத்திற்கு  அனுப்பி சோதனை செய்யப்பட்டது. அப்போது அதில் போலியோ நோயை உருவாக்கும் வைரஸ்  கண்டறியப்பட்டது. 
 
இதனை அடுத்து அப்பகுதியில் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தெலுங்கானா அரசு துரிதப்படுத்தி உள்ளது. வரும் 20 ஆம் தேதியிலிருந்து 26 ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.