1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2023 (10:30 IST)

பெட்ரோல் டேங்கில் உட்கார்ந்து கணவனை கட்டிப்பிடித்தபடி பைக்கில் பயணம்.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

பெட்ரோல் டேங்கில் உட்கார்ந்து கொண்டு கணவனை கட்டி அணைத்தபடி பைக்கில் பயணம் செய்த தம்பதிக்கு காவல்துறையினர் அதிரடியாக அபராதம் விதித்துள்ளனர்.
 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹபூர் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தம்பதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அந்த வாகனத்தின் முன் பகுதியில் பெட்ரோல் டேங்கில் ஒரு பெண் உட்கார்ந்து கொண்டு அவர் பைக்கை ஓட்டும் தனது கணவனை கட்டி அணைத்தபடி பயணம் செய்தார்.

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அந்த தம்பதியை கண்டுபிடித்து அவர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர். மேலும் இப்படி தொடர்ந்து நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.  

பொது இடத்தில் பைக்கில் செல்லும் போது கணவன் மனைவியாக இருந்தாலும் நாகரிகமாக செல்ல வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறும் வருகின்றனர்

Edited by Mahendran