1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 5 நவம்பர் 2015 (00:17 IST)

இன்று: தங்கப் பத்திரத் திட்டத்தை மோடி அறிமுகம் செய்கிறார்

தங்கப் பத்திரத் திட்டத்தை பிரதமர் மோடி இன்று அறிமுகப்படுத்த உள்ளார்.
 

 
அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தை பிரதமர் மோடி இன்று  அறிமுகப்படுத்த உள்ளார். முதலில் 5 மற்றும் 10 கிராம் நாணயங்களும் 20 கிராம் எடையில் கட்டியும் கிடைக்கும். இதை வேறு யாரும் போலியாக தயாரிக்க முடியாது. ஆனால், மறுசுழற்சி செய்யும் சிறப்பம்சம் கொண்டது.முதன்முறையாக இதுபோன்ற நாணயங்களை அரசு வெளியிட உள்ளது.
 
மேலும்,  தங்க டெபாசிட் திட்டம் மற்றும் தங்கப் பத்திரத் திட்டம் ஆகிய இரு திட்டங்களையும் மோடி அறிமுகம் செய்கிறார். இவை மத்திய அரசு அமைப்பான எம்எம்டிசியின் விற்பனை மையங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.