1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 20 அக்டோபர் 2023 (12:30 IST)

பான்-இந்தியா அவசர எச்சரிக்கை: செல் ஒலிபரப்பு எச்சரிக்கை திட்டத்தின் சோதனை

alert
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் பான்-இந்தியா அவசர எச்சரிக்கை அமைப்பை சோதிக்க  மக்களின் செல்போன் எண்ணிற்கு குறுஞ் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. 

இது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மூலம் செல் ப்ராட்காஸ்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பப்பட்ட மாதிரி சோதனைச் செய்தி   நாட்டு     மக்களின் செல்போன் எண்ணிற்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில்,  யாரும் பயப்பட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மக்களின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருக்கும். அதில், '' இது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மூலம் செல் ப்ராட்காஸ்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பப்பட்ட மாதிரி சோதனைச் செய்தி. உங்கள் முடிவில் இருந்து எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்பதால், இந்த செய்தியை புறக்கணிக்கவும். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் பான்-இந்தியா அவசர எச்சரிக்கை அமைப்பை சோதிக்க இந்த செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இது பொது பாதுகாப்பை மேம்படுத்துவதையும் அவசர காலங்களில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது'' என்று அதில் விளக்கம் தெரிவித்துள்ளது.