Last Updated : வெள்ளி, 25 செப்டம்பர் 2015 (20:58 IST)
எல்லையில் சுவர் கட்டும் விவகாரம்: ஐ.நா.வுக்கு பாகிஸ்தான் கடிதம்
எல்லைப் பகுதியில் சுவர் கட்ட இந்தியா முயற்சித்து வரும் நிலையில் இது குறித்து ஐ.நா.வுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது.
எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முறியடிக்கும் வகையிலும் இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியில் 12 மீட்டர் உயரமும, 135 அடி அகலமும் கொண்ட மாபெரும் சுவரை அமைக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது.
197 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லைப் பகுதியில் சுவர் கட்டுவதற்கான தொடக்கப்பணிகளும் நடைபெறற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தான் தூதர் மலிகா லோதி இந்த கடிதத்தை எழிதியுள்ளார். அந்த இரண்டு பக்க கடிதத்தில் எல்லையில் இந்தியா சுவர் கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.