1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (17:23 IST)

ஆபத்தான மலைச் சாலையில்... இரும்புக் கம்பிமேல் செல்லும் வாகனங்கள்..

இந்தியாவில் கேரளாம் மும்பைம் ஒடிஷா , கர்நாடகா போன்ற மாநிலங்களில் தென்மேற்கு  பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள சாலைகள் மற்றும் நிலப்பகுதிகள் வெள்ளக்காடாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் இமாச்சல் பிரதேசத்தில்ல் சாலைகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் மக்கள் சாலையில் வாகனங்களை இயக்குவதில் கடும் சிக்கலை சந்தித்து வருகின்றன.
 
இந்நிலையில் அம்மாநில அரசு முக்கிய சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் சேதமடைந்த மலைச் சாலைகளில்  இரும்பு கம்பிகளை வைத்து தற்சமயத்திற்கு மக்கள் அதில் பயணித்து வருகிறார்கள். ஆனால் கரணம் தப்பினால் மரணம் என்பதாக சிலரின்  கார்களில் ஆபத்தான் பயணத்தை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் மலைப்பாதையில் சாலையை வெள்ளம் அடித்துச் சென்ற நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் இரும்புக் கம்பியின் மேல் மிகுந்த சிரமத்திற்கு இடையில் ஒரு வாகனம் சென்றது குறிப்பிடத்தக்கது.