ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 5 ஜனவரி 2022 (17:28 IST)

ஒமிக்ரான் தொற்றால் இந்தியாவில் முதல் நபர் உயிரிழப்பு

ஒமிக்ரான் தொற்றால் இந்தியாவில் முதல் நபர் உயிரிழந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த கொரோனா பாதிப்புகள் 2,135 ஆக பதிவாகியுள்ளன. இதில் 828 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1,307 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இந்நிலையில், ஒமிக்ரான் தொற்றால் இந்தியாவில் முதல் நபர் உயிரிழந்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லால் அகர்வால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.