வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (06:25 IST)

வன்முறை வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை: நரேந்திர மோடி

வன்முறை வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை என்று, படேல் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

 
குஜராத் மாநிலத்தில், கல்வி, வேலைவாய்ப்பில் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கேட்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற மாநாடு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் போன்றவை கலவரத்தில் முடிந்தது. குஜராத் மாநிலமே ஸ்தம்பிக்கும் அளவுக்குப் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியது.
 
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, படேல் மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி  கூறுகையில், மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல் பிறந்த, வாழ்ந்த இந்த பூமியில் தற்போது கலவரமும், வன்முறையும் தேவையில்லை. வன்முறை வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான், மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.
 
எனவே, அனைவரும் வன்முறையை கைவிட்டு, அமைதிவழிப் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள். பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம் என்று தெரிவித்துள்ளார்.