1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2015 (20:46 IST)

உத்தர பிரதேச மாநிலத்தில் தூக்கி வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய நாய்

உத்தர பிரதேச மாநிலம் குர்ஜா நகரில், கல்லூரி மைதானத்தில் அனாதையாக தூக்கி வீசப்பட்ட குறைமாத பச்சிளம் குழந்தையை தெரு நாய்கள் கடித்து குதறியது சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பிரசவம் ஆவதற்கு முன்பே அந்த குழந்தையை கருக்கலைப்பு செய்த நிலையில், குர்ஜா நகரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் உறவினர்கள் அந்த குழந்தையை தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர். அப்போது அந்த குழந்தையை அங்கு சுற்றித்திரிந்த நாய்கள் கடித்து குதறியுள்ளன. 
 
இதைப்பார்த்த ஒருவர் உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த அந்த குழந்தையை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அந்த குழந்தையை பார்த்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
 
மேலும், பிரசவ காலத்திற்கு முன்பே இந்த குழந்தை பிறந்திருப்பதாகவும்.  இந்த குழந்தையின் தாயிற்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டு உள்ளதாகவும் மருத்தவர்கள் தெரிவித்தனர்