தொடர்புடைய செய்திகள்
- பாஜகவிற்கு எதிரான கூட்டணிக்கு தயார்: அகிலேஷ் யாதவ்
- யாரும் இல்லாததால் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டேன்; எப்.ஐ.ஆரில் இன்ஸ்பெக்டர் வாக்குமூலம்
- அப்பாடா ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க... கர்நாடக அமைச்சவை இன்று பதவியேற்பு...
- நடிகை நக்மா டிஸ்மிஸ்: காங்கிரஸ் கட்சி அதிரடி
- 10ஆம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மகனைப் பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்
அர்.எஸ்.எஸ் நிறுவனர் பாரத தாயின் புதல்வர்; பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் கண்டனம்
ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவாரை பாரத தாயின் புதல்வர் என்று பிரணாப் முகர்ஜி கூறியதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தற்போது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. இதற்கு சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணப் முகர்ஜி கலந்துக்கொண்டார்.
அதன்பின் நாக்பூரில் செய்தியாளர்களை சந்தித்த பிராண் முகர்ஜி கூறியதாவது:-
ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கே,பி,ஹெட்கேவார் பிறந்த இடத்தில் இருப்பது பெருமை கொள்கிறேன். அவர் பாரத தாயின் புதல்வர் என்று கூறினார்.
இவரது இந்த கருத்துக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பிரணாப் முகர்ஜி பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
