வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 22 ஜூலை 2021 (08:22 IST)

மொபைல் கேமராவை செல்லோ டேப் போட்டு ஒட்டிய மம்தா: ஏன் தெரியுமா?

தனது செல்போன் கேமராவை செல்லோ டேப் போட்டு ஒட்டியிருப்பதாக கூறிய அதை மக்களுக்கு காண்பித்தார் மம்தா பானர்ஜி. 

 
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ தயாரிக்கும் பெகாசஸ் மென்பொருள் உலகம் முழுவதும் உளவு வேலைகளில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த விவகாரம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் இந்த உளவு விவகாரம் குறித்து மத்திய அரசை விமர்சித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பெட்ரோல், டீசலுக்கு வரியை உயர்த்தி அந்த பணத்தை கொண்டு மத்திய அரசு மற்றவர்களை உளவு பார்த்து வருகிறது. இவ்வாறாக இந்தியாவை இருண்ட பாதைக்கு இந்த அரசு அழைத்து செல்கிறது என கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
மேலும் எனது செல்போன் ஒட்டு கேட்கப்படுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர்களோடு என்னால் பேச முடியவில்லை. அதோடு தனது செல்போன் கேமராவை செல்லோ டேப் போட்டு ஒட்டியிருப்பதாக கூறிய அதை மக்களுக்கு காண்பித்தார்.