1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 6 நவம்பர் 2015 (00:12 IST)

டெல்லியில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் வைகோ சந்திப்பு

டெல்லியில் அரசியல் மூத்த தலைவர்களுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திடீரென சந்தித்து பேசினார்.
 

 
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,  டெல்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலமான அஜய் பவனுக்குச் சென்று, அக்கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் செயலாளர் ஏ.பி.பரதன், தேசியச் செயலாளர் டி. இராஜா ஆகியோரை சந்தித்து பேசினார்.
 
மேலும்,  நவம்பர் 25 ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ல மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்கப் பொதுக் கூட்டத்திற்கு வைகோ அழைப்பு விடுத்தார். பின்பு, இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின்  அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை சந்தித்து இதே கோரிக்கையை முன்வைத்தார்.
 
இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் போன்றவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.