வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 3 ஜூன் 2016 (15:40 IST)

அமித்ஷாவுக்கு சமையல் செய்தவரை வலைவிரித்து தேடும் மாயாவதி

அலகபாத்தில் நடைப்பெற்ற விழாவில் அமித்ஷாவுக்கு சமையல் செய்த நபரை தேடி வருகிறார் மாயாவதி.


 

 
அலகபாத் அருகே ஜோகியாபூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலித் மக்களோடு ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தியுள்ளார். அந்த விழாவில் கட்டாயம் ஒரு தலித் சமையல் செய்திருக்க வாய்பில்லை என்று கூறி பகுஜன் சமாஜ் வா கட்சி தலைவர் மாயாவதி அந்த நபரை தேடி வருகிறார்.
 
அமித்ஷா தலித் மக்களை முட்டால் ஆக்குவதாக கூறி, அதை நிரூபிக்க மாயாவதி, தனது கட்சி ஆட்கள் மூலம் அந்த சமையல் செய்த நபரை விடாது வலை வீசி தேடி வருகிறார்.
 
மேலும் இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மண்டல ஒருகிணைப்பாளர் ராம் குமார் குரீல் கூறியதாவது:-
 
அமித்ஷாவுக்கு சமையல் செய்த நபரை நான்கு திசையிலும் தேடி வருகிறோம் கட்டாயம் கண்டுபிடிப்போம். உணவு பரிமாரிய இடத்தில் தலித் மக்களை விட மிகவும் தாழ்த்தப்பட்ட பித்தி என்ற சமுகத்தினர் அதிகம். சில தலித் மக்களுடன் வந்து சாப்பிட்டது, அரசியல் தவிர வேறு எதுவும் இல்லை, என்றார்.